/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கொண்டாட்டத்திற்கு எல்லை பிரித்த போலீசார் கொண்டாட்டத்திற்கு எல்லை பிரித்த போலீசார்
கொண்டாட்டத்திற்கு எல்லை பிரித்த போலீசார்
கொண்டாட்டத்திற்கு எல்லை பிரித்த போலீசார்
கொண்டாட்டத்திற்கு எல்லை பிரித்த போலீசார்
ADDED : ஜூன் 05, 2024 01:18 AM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி ஓட்டு எண்ணிக்கை மையத்தின் முன், நேற்று மாலை, தி.மு.க., மற்றும் பா.ஜ., கட்சியினர் 'டிரம்ஸ்' அடித்துக்கொண்டிருந்தனர். இதனால், இரு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டது.
போலீசார் இரு தரப்பினரையும் விரட்டியடித்தனர். தி.மு.க.,வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதால், ஓட்டு எண்ணும் மையம் முன் தி.மு.க.,வினர் கொண்டாடலாம்; பா.ஜ.,வினர் தேசிய அளவிலான வெற்றி என்பதால், பஸ் ஸ்டாண்ட் அருகே கொண்டாடுங்கள் என சரக்கு ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடியதில், அங்கு இருந்த, கல்லாபுரத்தை சேர்ந்த கட்சியினர் பலருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை அங்கிருந்தவர்கள், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.