Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தீவிரவாத தடுப்பு பிரிவு அலுவலகம் கட்ட ஒரு ஏக்கர் இடம் ஒதுக்கீடு

தீவிரவாத தடுப்பு பிரிவு அலுவலகம் கட்ட ஒரு ஏக்கர் இடம் ஒதுக்கீடு

தீவிரவாத தடுப்பு பிரிவு அலுவலகம் கட்ட ஒரு ஏக்கர் இடம் ஒதுக்கீடு

தீவிரவாத தடுப்பு பிரிவு அலுவலகம் கட்ட ஒரு ஏக்கர் இடம் ஒதுக்கீடு

ADDED : மார் 13, 2025 11:47 PM


Google News
கோவை; கோவை மாவட்ட தீவிரவாத தடுப்பு பிரிவு அலுவலம் கட்ட ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஒரு ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கோவையில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு, கடந்த 2024ம் ஆண்டு தீவிரவாத தடுப்பு பிரிவு கோவையில் அமைக்கப்பட்டது. முதலில் காந்திபுரத்தில் செயல்பட்டு வந்தது.

பின்னர், இடம் பற்றாக்குறை காரணமாக, தீவிரவாத தடுப்பு பிரிவு அலுவலகம் சிட்ரா, கோல்டுவின்ஸ் பகுதியில் ஒரு தனியார் கட்டடத்திற்கு மாற்றப்பட்டு, தற்போது அங்கு எஸ்.பி., பத்ரிநாராயணன் தலைமையில் செயல்பட்டு வருகிறது.

தீவிரவாத செயல்களை கண்டறிந்து தடுக்கும் வகையில் இப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தீவிரவாத தடுப்பு பிரிவு அலுவலகம் கட்ட, ரேஸ்கோர்ஸ் பகுதியில் 2.5 ஏக்கர் நிலம் ஒதுக்கவேண்டும் என அதிகாரிகள் கேட்டிருந்தனர். இந்நிலையில், தீவிரவாத பிரிவு அலுவலகம் அமைக்க ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us