/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஒன்பதாம் வகுப்புக்கு முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு ஒன்பதாம் வகுப்புக்கு முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
ஒன்பதாம் வகுப்புக்கு முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
ஒன்பதாம் வகுப்புக்கு முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
ஒன்பதாம் வகுப்புக்கு முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
ADDED : மார் 13, 2025 11:47 PM
கோவை; ஒன்று முதல், 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளுக்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரைக்கும், ஆறு முதல், 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், 2024-25ம் கல்வியாண்டுக்கான முழு ஆண்டு தேர்வு அட்டவணையை பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்., 9 முதல், 21ம் தேதி வரை, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது. ஆறு முதல், 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஏப்., 8 முதல், 24ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.