/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வெளிநாட்டில் இருந்தபடி சொத்து வாங்க உதவும் 'NRI POWER ' வெளிநாட்டில் இருந்தபடி சொத்து வாங்க உதவும் 'NRI POWER '
வெளிநாட்டில் இருந்தபடி சொத்து வாங்க உதவும் 'NRI POWER '
வெளிநாட்டில் இருந்தபடி சொத்து வாங்க உதவும் 'NRI POWER '
வெளிநாட்டில் இருந்தபடி சொத்து வாங்க உதவும் 'NRI POWER '
ADDED : ஜூலை 19, 2024 10:55 PM
வெளிநாட்டில் வசிக்கும் ஒரு நபர், நேரில் வராமலேயே அவர் பெயரில் இந்தியாவில் உள்ள எந்த சொத்துக்களையும் விற்கலாம், வாங்கலாம், அதற்கு NRI POWER வழி வகை செய்கிறது.
இதுகுறித்து, கோவையை சேர்ந்த வக்கீல் வடவள்ளி நாகராஜன் கூறியதாவது:
அங்கீகரிக்கப்பட்ட லே-அவுட்களில் உள்ள மனையிடத்தை, முழுவதுமாகத் தான் கிரையம் வாங்க வேண்டும் மற்றும் விற்க வேண்டும்.
அவ்வாறின்றி ஒரு மனையை, இரண்டாகவோ, மூன்றாகவோ பிரித்து விற்பது விதிமீறல் என்று வரைபட அனுமதி நிபந்தனைகளிலேயே தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தும், பலர் அதை பொருட்படுத்தாமல், விலை குறைவாக கிடைக்கிறது என்பதற்காக வாங்கின்றனர்.
அங்கீகரிக்கப்பட்ட லே-அவுட் வரைபடத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை ஒவ்வொருவரும், தெளிவாக படித்த பிறகே, மனை வாங்க வேண்டும். அந்த நிபந்தனை படிவத்தை கிரைய ஆவணத்துடன் இணைத்து, பதிவுக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர், அதாவது, கடைநிலை ஊழியர்கள், அலுவலக உதவியாளர் போன்ற குறைந்த வருவாய் பெறும் நபர்கள், மனை வாங்கி வீடு கட்டிக்கொள்ள பிரத்யேகமாக ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட லே-அவுட்களிலும் சில வீட்டு மனைகள் ஒதுக்கப்படுகின்றன.
இருப்பினும், அதையும் அதிக வருவாய் உள்ளவர்கள், இரண்டு சைட்கள் மற்றும் மூன்று சைட்களை மொத்தமாக கிரையம் வாங்கி அதை ஒருங்கிணைத்து வீடு கட்டுகின்றனர். இதுவும் விதிமீறல் தான். அவ்வாறான சூழ்நிலைகளில் வங்கி கடனோ, கட்டட அனுமதியோ பெற இயலாது.
வெளிநாட்டில் வசிக்கும் ஒரு நபர், நேரில் வராமலேயே அவர் பெயரில் இந்தியாவில் உள்ள எந்த சொத்துக்களையும் விற்கலாம், வாங்கலாம், அதற்கு NRI POWER வழி வகை செய்கிறது.
அதற்கு, இந்தியாவில் உள்ள தனது ரத்த சம்பந்தமுள்ள உறவினரை, தனது பொது அதிகார முகவராக நியமித்து, அதை சொத்து அமைந்திருக்கும் நிலவரை எல்லைக்குட்பட்ட சார் பதிவு அலுவலகத்தில் தாக்கல் செய்து பதிவு செய்து அந்த விபரங்களை, கிரைய ஆவணத்தில் குறிப்பிட்டு சொத்தினை வாங்கலாம் மற்றும் விற்கலாம்; இதற்கு நேரில் வரத் தேவையில்லை.
இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில், ஏற்கனவே என்.ஆர்.ஐ., பெயரில் உள்ள சொத்தை விற்பதற்காக பவர் கொடுக்கும் போது, அதில் சொத்து விபரம் முழுமையாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
அவ்வாறு குறிப்பிடாமல் இருந்தால், அந்த பவர் பத்திரத்தை வைத்து கிரைய ஆவணம் தயாரித்து, பதிவுக்கு தாக்கல் செய்யும் போது நிராகரிக்கப்படலாம். அவ்வாறு, பதிவு செய்திருந்தாலும், அந்த சொத்திற்கு வங்கி கடனும் நிராகரிக்கப்படலாம். இதில் கவனம் தேவை.
இவ்வாறு, அவர் கூறினார். தொடர்புக்கு: 98422 50145.