Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவையில் முதல் முறையாக தேசிய ஸ்கேட்டிங் போட்டி

கோவையில் முதல் முறையாக தேசிய ஸ்கேட்டிங் போட்டி

கோவையில் முதல் முறையாக தேசிய ஸ்கேட்டிங் போட்டி

கோவையில் முதல் முறையாக தேசிய ஸ்கேட்டிங் போட்டி

ADDED : ஜூன் 26, 2024 01:47 AM


Google News
கோவை;கோவையில் முதல் முறையாக, அகில இந்திய ஸ்கேட்டிங் போட்டி ஆக., 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடக்கவுள்ளது.

கோவை மாவட்ட ஸ்கேட்டிங் சங்கம் சார்பில், இரண்டாம் ஆண்டு 'இந்தியா ஸ்கேட்' தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் ஆக்., 7 முதல் 11ம் தேதி கோவை மற்றும் பொள்ளாச்சியில் நடக்கின்றன.

இப்போட்டியில், நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 6,000க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். வீரர் - வீராங்கனைகளுக்கு, 12 வகையாக போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இதன், ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டி, பொள்ளாச்சி சர்வதேச ரோலர் ஸ்கேட்டிங் கோர்ட்டிலும், ஆர்டிஸ்டிக், ரோலர் ஹாக்கி, இன்லைன் ஹாக்கி, இன்லைன் பிரீஸ்டைல், ஸ்கேட் போர்டு, ரோலர், டவுன்ஹில், ஆல்பைன் உள்ளிட்ட போட்டிகள், கோவை வ.உ.சி., ஸ்கேட்டிங் ரிங் மற்றும் காந்திபார்க் ஸ்கேட்டிங் ரிங் ஆகிய இடங்களில் நடத்தப்படவுள்ளன. இப்போட்டிக்கான லோகோ வெளியீட்டு விழா, வ.உ.சி., ஸ்கேட்டிங் மைதானத்தில் நடந்தது. கோவை எம்.பி., ராஜ்குமார் லோகோவை வெளியிட்டார். தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் சங்க தலைவர் பிரதாப் குமார், அகில இந்திய ரோலர் ஸ்கேட்டிங் சங்க பொருளாளர் பர்கத்குமார், துணை தலைவர் செபாஸ்டின் பிரேம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

போட்டிக்கான ஏற்பாடுகளை தலைவர் சுதாகரன், துணை தலைவர் அருண் பிரசாத், செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் சாந்த நரசிம்மன், பொள்ளாச்சி மண்டல ரோலர் ஸ்கேட்டிங் சங்க தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் செய்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us