/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மகனை தேடி மழை, வெயிலில் தவித்த தாய்! தேடி சேர்த்து வைத்தது 'ஈரநெஞ்சம்' மகனை தேடி மழை, வெயிலில் தவித்த தாய்! தேடி சேர்த்து வைத்தது 'ஈரநெஞ்சம்'
மகனை தேடி மழை, வெயிலில் தவித்த தாய்! தேடி சேர்த்து வைத்தது 'ஈரநெஞ்சம்'
மகனை தேடி மழை, வெயிலில் தவித்த தாய்! தேடி சேர்த்து வைத்தது 'ஈரநெஞ்சம்'
மகனை தேடி மழை, வெயிலில் தவித்த தாய்! தேடி சேர்த்து வைத்தது 'ஈரநெஞ்சம்'
ADDED : ஜூலை 18, 2024 12:14 AM

கோவை : புதுக்கோட்டையில் இருந்து மகனை காண வந்து, கோவையில் பரிதவித்த தாயை, 'ஈரநெஞ்சம்' அறக்கட்டளை நிர்வாகிகள் மீட்டு ஒப்படைத்தனர்.
கோவை அரசு மருத்துவமனை சுற்றுப்பகுதியில், 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி, மழை, வெயிலில் பரிதவிப்பதாக, ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்கு கடந்த, 12ம் தேதி தகவல் கிடைத்தது.
போலீசார் உதவியுடன் மூதாட்டி மீட்கப்பட்டு, ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரிக்கும் மாநகராட்சி முதியோர் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டார்.
புதுக்கோட்டை, இலுப்பூர் தாலுகா, நிலையப்பட்டியை சேர்ந்த இவர், தனது மகனை பார்ப்பதற்காக கோவை வந்துள்ளார். மகனின் முகவரி, மொபைல்போன் எண் போன்ற விவரங்களை சொல்லத் தெரியாமல், அழுதபடி இருந்துள்ளார்.
தனது பெயர் வசந்தா,65, என்றும், மகன் பாண்டித்துரை கோவையில் வேலை செய்து வருவதாகவும், மகள் பாண்டிசெல்வி புதுக்கோட்டையில் வசிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, போலீசார் உதவியுடன் வசந்தாவின் உறவினரை தேடும் பணியை மேற்கொண்ட ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர், மறுநாள் கோவையில் உள்ள மகனிடம் ஒப்படைத்தனர்.
ஈரநெஞ்சம் அறக்கட்டளை நிர்வாகி மகேந்திரன் கூறுகையில், ''கடந்த 10ம் தேதி முதல் தனது மகனை தேடி வசந்தா அலைந்துள்ளார். அவர் குறிப்பிட்ட தகவல்களை வைத்து, புதுக்கோட்டையில் அவரது மகள் வசிக்கும் இலுப்பூர் தாலுகா மக்கள், கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர், அவரது மகள் பாண்டி செல்வி மூலம், மகன் பாண்டித்துரைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 13ம் தேதி பாண்டித்துரையிடம் வசந்தா ஒப்படைக்கப்பட்டார்,'' என்றார்.