Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வாகன விபத்தில் தாய், மகள் காயம்

வாகன விபத்தில் தாய், மகள் காயம்

வாகன விபத்தில் தாய், மகள் காயம்

வாகன விபத்தில் தாய், மகள் காயம்

ADDED : மார் 11, 2025 09:33 PM


Google News
கிணத்துக்கடவு; நெகமம் அருகே உள்ள பெரியகளந்தை பகுதியை சேர்ந்தவர் கவுசல்யா, 29. அவரது தாய் கலாமணி, 50. இருவரும் ஸ்கூட்டரில் நெ.10.முத்தூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று கொண்டிருந்தனர். ஸ்கூட்டரை கவுசல்யா ஓட்டினார்.

பொள்ளாச்சி - கோவை ரோட்டில் கிணத்துக்கடவு தனியார் பள்ளி அருகே உள்ள வளைவில் திரும்பும் போது, பின்னால் வந்த, பொள்ளாச்சியை சேர்ந்த சரவணன் என்பவர் ஓட்டிய கார், ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், தாய் மற்றும் மகள் இருவரும் படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள், அவர்களை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us