ADDED : ஜூன் 16, 2024 11:35 PM
ஆனைமலை:ஆனைமலை அருகே, தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
ஆனைமலை அருகே, காளியாபுரம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படி நின்ற நபரை பிடித்து விசாரித்தனர்.
அதில், காளியாபுரத்தை சேர்ந்த தண்டபாணி,48, என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்ததும் தெரியவந்தது.இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், 60 லாட்டரி சீட்டுகள், 310 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.