ADDED : ஜூலை 26, 2024 11:23 PM
கோவை;மூன்று சட்டங்களுக்கு எதிராக, டில்லியில் போராட்டம் நடத்த, கோவை வக்கீல்கள் நேற்று ரயிலில் புறப்பட்டு சென்றனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்திற்கு, எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வக்கீல்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்க கூட்டுக்குழு(ஜேக்) சார்பில், வரும் 29ம் தேதி, டில்லி, ஜந்தர் மந்த் பகுதியில் போராட்டம் நடத்தப்படுகிறது. இதில், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வக்கீல் சங்கத்தினர் திரளாக பங்கேற்க, 'ஜேக்' சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோவை வக்கீல் சங்கத்தை சேர்ந்த, 100 க்கும் மேற்பட்ட வக்கீல்கள், நேற்று ரயிலில் டில்லி புறப்பட்டு சென்றனர்.