/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 60 நாட்களுக்கு பின் மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஜாக்பாட் 60 நாட்களுக்கு பின் மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஜாக்பாட்
60 நாட்களுக்கு பின் மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஜாக்பாட்
60 நாட்களுக்கு பின் மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஜாக்பாட்
60 நாட்களுக்கு பின் மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஜாக்பாட்
ADDED : ஜூன் 16, 2024 01:13 AM

ராமேஸ்வரம், ஜூன் 16-
தடை காலம் 60 நாட்களுக்கு பின் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் வலையில் அதிக மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சி அடைந்தனர்.
மீன்கள் இனப்பெருக்கத்திற்காக விசைப்படகில் மீன்பிடிக்க செல்ல தமிழக அரசு 60 நாட்கள் தடை விதித்தது. இத்தடை முடிவதற்கு முன்பே ஜூன் 14 மதியம் 3:00 மணிக்கு ராமேஸ்வரம் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இதில் 50க்கும் மேற்பட்ட படகுகளில் தலா 2 முதல் 3 டன் செரையா மீன்கள் சிக்கியது.
மேலும் 100 க்கும் மேற்பட்ட விசைப்படகில் தலா 100 முதல் 150 கிலோ இறால் மீன்கள் சிக்கியது. இம்மீன்களை ராமேஸ்வரம், மண்டபம் கரையில் நேற்று அதிகாலை இறக்கி விட்டு மீண்டும் மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். தடை காலம் 60 நாட்களுக்கு பின் அதிக மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மானிய டீசல் ரத்து
தடைக்காலம் முடிவதற்கு முன் மீன்துறை அனுமதி டோக்கன் பெறாமல் ஜூலை 14 மதியம் 3:00 மணிக்கு ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் இருந்து 1200 விசைப்படகில் மீன் பிடிக்க சென்றனர்.
இப்படகுகளுக்கு மீன்துறை சட்டப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை முடியும் வரை மீன்பிடி அனுமதி டோக்கன், மானிய டீசல் வழங்கப்படாது என ராமேஸ்வரம் மீன்துறை உதவி இயக்குநர் அப்துல்காதர் ஜெயிலானி தெரிவித்துள்ளார்.