Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இயங்காத சிக்னல்கள்

இயங்காத சிக்னல்கள்

இயங்காத சிக்னல்கள்

இயங்காத சிக்னல்கள்

ADDED : ஜூன் 20, 2024 05:54 AM


Google News
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், பஸ் ஸ்டாண்ட், காந்திசிலை ஆகிய இடங்களில் இருந்த போக்குவரத்து சிக்னல் அகற்றப்பட்டு, ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், அங்கு போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்காததால், அவ்வப்போது போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகின்றனர்.

மேலும், மகாலிங்கபுரம் ரோடு - பல்லடம் ரோடு சந்திப்பு, மகாலிங்கபுரம் ஆர்ச் - கோவை ரோடு சந்திப்பு, தேர்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில், தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டது.

ஆனால், சிக்னல் சரிவர செயல்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்படுகிறது. இதற்கு, போலீசார் தீர்வு காண வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us