/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ முன்னாள் படைவீரர்களுக்கு ஜூலை 3ல் குறைகேட்பு முன்னாள் படைவீரர்களுக்கு ஜூலை 3ல் குறைகேட்பு
முன்னாள் படைவீரர்களுக்கு ஜூலை 3ல் குறைகேட்பு
முன்னாள் படைவீரர்களுக்கு ஜூலை 3ல் குறைகேட்பு
முன்னாள் படைவீரர்களுக்கு ஜூலை 3ல் குறைகேட்பு
ADDED : ஜூன் 24, 2024 12:45 AM
கோவை;கோவை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், தற்போது படையில் பணிபுரிவோர் மற்றும் அவரை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம், ஜூலை, 3ம் தேதி (புதன்கிழமை) காலை, 9:00 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்கும் கூட்டரங்கில், கலெக்டர் தலைமையில் நடக்கிறது.
இம்மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள், சார்ந்தோர் மற்றும் படைவீரர் குடும்பத்தினர் பங்கேற்று, தங்களது விண்ணப்பங்களை இரட்டை பிரதிகளில் சமர்ப்பிக்க வேண்டுமென, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.