Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சவரத் தொழிலாளர் சங்க பொதுக்குழு கூட்டம்

சவரத் தொழிலாளர் சங்க பொதுக்குழு கூட்டம்

சவரத் தொழிலாளர் சங்க பொதுக்குழு கூட்டம்

சவரத் தொழிலாளர் சங்க பொதுக்குழு கூட்டம்

ADDED : ஜூன் 04, 2024 01:25 AM


Google News
கோவை:தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்க பொதுக்குழு கூட்டம், மாநகர் மாவட்ட தலைவர் ராமசாமி தலைமையில் நடந்தது.

கூட்டத்தில், 'வரும் கல்வி ஆண்டு முதல், அரசுப் பள்ளிகளில் பயின்று 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ, மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்குவது, வீடற்ற சவரத் தொழிலாளர்களுக்கு அரசின் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு பெற்றத்தர நடவடிக்கை எடுப்பது' என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநகர மாவட்ட பொருளாளர் வேலுசாமி, செயலாளர் மகேந்திரன், அமைப்பு செயலாளர் சசிகுமார், மாநில பொருளாளர் நடராஜன், தணிக்கைக் குழு தலைவர் குப்புசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us