ADDED : ஜூன் 20, 2024 05:02 AM
நெகமம் : பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில், நெகமம் பகுதியில் ரோட்டை கடந்த முதியவர், கார் மோதியதில் காயமடைந்தார்.
பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில், நெகமம் சவுத் இந்தியன் வங்கி அருகே, நெகமத்தை சேர்ந்த பழனிசாமி, 75, என்பவர் ரோட்டை கடந்தார். அப்போது, பழனியை சேர்ந்த சபரி மணிகண்டன், 35, என்பவர், பொள்ளாச்சி நோக்கி காரில் வந்த போது, ரோட்டை கடந்த பழனிசாமி மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், காயம் அடைந்த பழனிசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு, பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.