/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வாழைத்தார் வரத்து சரிவு அதிக விலைக்கு விற்றது வாழைத்தார் வரத்து சரிவு அதிக விலைக்கு விற்றது
வாழைத்தார் வரத்து சரிவு அதிக விலைக்கு விற்றது
வாழைத்தார் வரத்து சரிவு அதிக விலைக்கு விற்றது
வாழைத்தார் வரத்து சரிவு அதிக விலைக்கு விற்றது
ADDED : ஜூன் 20, 2024 05:02 AM
கிணத்துக்கடவு, : கிணத்துக்கடவு, தினசரி மார்க்கெட்டிற்கு வாழைத்தார் வரத்து சென்ற வாரத்தை விட குறைந்த நிலையில், விலை உயர்ந்தது.
கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில், விவசாயிகள் தனிப்பயிராகவும், தென்னையில் ஊடுபயிராகவும் பல்வேறு ரக வாழையை சாகுபடி செய்துள்ளனர். அறுவடைக்கு பின், கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டிற்கு வாழைத்தார் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. நேற்று, வாழைத்தார் வரத்து குறைந்த நிலையில், விலை அதிகரித்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
இந்த வாரம் செவ்வாழை கிலோ - 65, பூவன் - 32, நேந்திரன் - 55, கதளி - 60, சாம்பிராணி வகை - 45, ரஸ்தாளி - 60 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
இதில், சென்ற வாரத்தை விட தற்போது அனைத்து வகை வாழையும் விலை அதிகரித்துள்ளது. இதில், கதளி கிலோ - 25, நேந்திரன் மற்றும் ரஸ்தாளி - 20 ரூபாய், சாம்பிராணி வகை - 10, செவ்வாழை - 5 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.
வியாபாரிகள் கூறுகையில், 'கிணத்துக்கடவு மார்க்கெட்டில் கடந்த வாரத்தை விட, இந்த வாரம் வாழை வரத்து குறைவாகவே இருந்தது. இதனால், அனைத்து வகை வாழைத்தார் விலையும் அதிகரித்துள்ளது,' என்றனர்.