/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி வைபவம் அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி வைபவம்
அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி வைபவம்
அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி வைபவம்
அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி வைபவம்
ADDED : ஜூலை 03, 2024 02:37 AM

மேட்டுப்பாளையம்;காரமடை அரங்கநாதர் கோவிலில், நேற்று ஆனி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.
இதையொட்டி, மூலவர் அரங்கநாதர் பெருமாளுக்கு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கால சந்தி பூஜை, விஷ்வக் சேனர், ஆராதனம், புண்யாவதனம், கலச ஆவாஹனம் ஆகிய வைபவங்கள் நடந்தன. ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாளுக்கு, ஸ்தபன திருமஞ்சனம் செய்யப்பட்டது.
தொடர்ந்து தேன், நெய், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகிய வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் நடந்தது. பின்பு அரங்கநாத பெருமாள் மாம்பழ நிற பட்டுடுத்தி, வெள்ளி சிம்மாசனத்தில், மேள, தாளம் முழங்க கோவில் வளாகத்தில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பின்பு, ஆஸ்தானம் எழுந்தருளிய அரங்கநாத பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உச்ச கால பூஜை, வேத பாராயணம் சாற்று முறை, தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில் கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், மிராஸ்தரர்கள், கோவில் செயல் அலுவலர், அறங்காவலர் குழுவினர், பணியாளர்கள், பக்தர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.