ADDED : ஜூலை 03, 2024 02:39 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 'டிஎன் கிரீன் கிரியேட்டர்ஸ்' குழு மற்றும் கல்லுாரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில், 600 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் சுமதி வரவேற்றார்.
பொள்ளாச்சி சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா, டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
சுற்றுச்சூழல் சமநிலையை பேணுவதற்கும், காலநிலை மாற்றத்தை தணிப்பதற்கும், மரங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.