/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தேர்தல் வெற்றியை கொண்டாடிய தி.மு.க., தேர்தல் வெற்றியை கொண்டாடிய தி.மு.க.,
தேர்தல் வெற்றியை கொண்டாடிய தி.மு.க.,
தேர்தல் வெற்றியை கொண்டாடிய தி.மு.க.,
தேர்தல் வெற்றியை கொண்டாடிய தி.மு.க.,
ADDED : ஜூன் 05, 2024 12:10 AM

தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூரில், தி.மு.க., பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் ஈஸ்வரசாமி வெற்றி பெற்றதை, தி.மு.க., பட்டாசு வெடித்தும், ஜமாப் அடித்தும் கொண்டாடினர்.
நாடுமுழுவதும் லோக்சபா தேர்தல், 7 கட்டமாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலின், ஓட்டு எண்ணிக்கை, நாடுமுழுவதும் நேற்று நடந்தது. இதில், பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஈஸ்வரசாமி, 2 லட்சத்திற்கும் மேலான ஓட்டு வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார்.
அனைத்து சுற்று எண்ணிக்கையும் முடிந்ததும், தி.மு.க.,வினர், ஜமாப் அடித்து, ஊர்வலமாக வந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். தொடர்ந்து, மாரியம்மன் கோவில் மைதானத்தில், பட்டாசு வெடித்தும், நடனமாடியும் வெற்றியை கொண்டாடினர்.