/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாவட்டங்கள் பிரிப்பு; மாநகராட்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு! பயனை விட பாதிப்பு அதிகமாவதாக கருத்து மாவட்டங்கள் பிரிப்பு; மாநகராட்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு! பயனை விட பாதிப்பு அதிகமாவதாக கருத்து
மாவட்டங்கள் பிரிப்பு; மாநகராட்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு! பயனை விட பாதிப்பு அதிகமாவதாக கருத்து
மாவட்டங்கள் பிரிப்பு; மாநகராட்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு! பயனை விட பாதிப்பு அதிகமாவதாக கருத்து
மாவட்டங்கள் பிரிப்பு; மாநகராட்சி விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு! பயனை விட பாதிப்பு அதிகமாவதாக கருத்து
இணைத்தும் பலன் இல்லை
ஆனால் 14 ஆண்டுகளுக்கு முன், கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட வடவள்ளி, வீரகேரளம், கவுண்டம்பாளையம், காளப்பட்டி, துடியலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இப்போது வரை பாதாள சாக்கடைத் திட்டமே வரவில்லை.
பாதிப்புகள் என்னென்ன?
வரி உயர்கிறது; கட்டட அனுமதி, குடிநீர் இணைப்புப் பெறுவது கடினமாகிறது; சான்றுகள் பெறுவதற்கு, பல மடங்கு அதிகமாக லஞ்சம் தர வேண்டியுள்ளது. அதிகாரிகளைச் சந்திப்பதே, அபூர்வமாகவுள்ளது. ஒரு சின்ன வேலைக்கும், மாநகராட்சி அலுவலகத்துக்கு அதிக துாரம் சென்று அலைக்கழிப்பைச் சந்திக்க வேண்டியுள்ளது. அனைத்துக்கும் மேலாக, ஒரு வார்டின் பரப்பு மிகப்பெரியதாகி விடுகிறது.
நில மதிப்பு உயர்வே பலன்
ஆட்சி மாறும்போதெல்லாம், மாவட்டங்கள் பிரிக்கப்படுகின்றன. இதனால் மக்களும் பலவிதங்களில் பயன் பெறுகின்றனர். ஆனால் மாநகராட்சியை விரிவாக்கம் செய்து, அருகிலுள்ள உள்ளாட்சிகளை இணைப்பதால், எதிர்மாறான விளைவுகள் ஏற்படுவதாக பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். நில மதிப்பு உயர்வதை தவிர, வேறு எந்த பயனுமில்லை என்று சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளனர்.