Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நடைபாதையில் புதரால் அதிருப்தி

நடைபாதையில் புதரால் அதிருப்தி

நடைபாதையில் புதரால் அதிருப்தி

நடைபாதையில் புதரால் அதிருப்தி

ADDED : ஜூலை 27, 2024 12:36 AM


Google News
Latest Tamil News
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட சிங்கராம்பாளையம், 8வது வார்டு, புதுக்காலனியில், குடியிருப்புகள் அதிகம் உள்ளன. இப்பகுதி மக்கள் சென்று வர ரோட்டில் 'பேவர் பிளாக்' கற்கள் பதிக்கப்பட்டு இருந்தது.

இப்பகுதி மக்கள், கிணத்துக்கடவு சர்வீஸ் ரோடு செல்லவும் 'பேவர் பிளாக்' கற்கள் பதிக்கப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இன்றி, புதர் முளைத்து ஒத்தையடி பாதை போன்று காட்சியளிக்கிறது. இதனால், இந்த வழியில் பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து செல்ல அச்சப்படுகின்றனர்.

இதனால், இவ்வழியை தவிர்த்து சிங்கராம்பாளையம் ரோடு வழியாக, சர்வீஸ் ரோட்டை அடைகின்றனர். மக்கள் நலன் கருதி நடைபாதையில் உள்ள புதரை அகற்றி, 'பேவர் பிளாக்' கற்களை சீரமைக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us