Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தினமலர் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி! மாணவர்கள், பெற்றோர் திரளானோர் பங்கேற்பு

தினமலர் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி! மாணவர்கள், பெற்றோர் திரளானோர் பங்கேற்பு

தினமலர் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி! மாணவர்கள், பெற்றோர் திரளானோர் பங்கேற்பு

தினமலர் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி! மாணவர்கள், பெற்றோர் திரளானோர் பங்கேற்பு

ADDED : ஜூலை 06, 2024 08:42 PM


Google News
Latest Tamil News
கோவை:'தினமலர்' நாளிதழ் சார்பில் நடந்த, இன்ஜி., மாணவர்களுக்கான கவுன்சிலிங் 2024 வழிகாட்டி நிகழ்ச்சியில், மாணவர்கள், பெற்றோர் திரளாக பங்கேற்றனர்.

அண்ணா பல்கலைக்கழகம் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., பி.டெக்., முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு, தமிழக அரசு சார்பில் ஆன்லைனில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

இதில் பங்கேற்கும் மாணவர்கள், தங்களுக்கு விருப்பமான கல்லுாரி மற்றும் பாடப் பிரிவை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து, 'டி.என்.இ.ஏ., இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி--2024' என்ற நிகழ்ச்சி, கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நேற்று நடந்தது.

இதில் பங்கேற்ற கல்லூரி நிர்வாகிகள், விருப்பப் பாடப் பிரிவு துறையைத் தேர்வு செய்யும் முறை, ஆன்லைன் கவுன்சிலிங் விதிமுறைகள், சிறந்த கல்லுாரி மற்றும் பாடப் பிரிவை தேர்வு செய்தல், 'கட் ஆப்' மதிப்பெண்ணின் முக்கியத்துவம், தரவரிசை, வேலை வாய்ப்புகள் மிகுந்த இன்ஜினியரிங் பாடப் பிரிவுகள், சிறந்த கல்லுாரியைத் தேர்வு செய்யும் வழிமுறைகள், எந்த படிப்பிற்கு மவுசு அதிகம், என்ன படிப்பிற்கு என்ன எதிர்காலம், கோர் இன்ஜினியரிங் படிப்புகளுக்கு உள்ள வாய்ப்புகள் என மாணவர்கள், பெற்றோரின் அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தனர்.

தினமலர் நாளிதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியை, முன்னதாக, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் ரமேஷ், அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை முன்னாள் இயக்குனர் நாகராஜன், ஸ்ரீ ஈஸ்வர் தொழில்நுட்பக் கல்லூரி இயக்குநர் ராஜாராம், கற்பகம் குழுமத்தின் பிராண்டிங் மற்றும் சேர்க்கை பிரிவு நிர்வாகி சுப்புராஜ், கற்பகம் கல்லூரி மக்கள் தொடர்பு அலுவலர் ஆதிபாண்டியன் ஆகியோர், குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தனர்.

கரம் கோர்த்தவர்கள்


இந்த நிகழ்ச்சியை, தினமலர் நாளிதழுடன் கோவை ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரி மற்றும் கற்பகம் கல்வி நிறுவனத்தினர் இணைந்து வழங்கினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us