Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பேஸ்புக்கில் கொலை மிரட்டல்: பா.ஜ., மாநில பொதுசெயலாளர் புகார்

பேஸ்புக்கில் கொலை மிரட்டல்: பா.ஜ., மாநில பொதுசெயலாளர் புகார்

பேஸ்புக்கில் கொலை மிரட்டல்: பா.ஜ., மாநில பொதுசெயலாளர் புகார்

பேஸ்புக்கில் கொலை மிரட்டல்: பா.ஜ., மாநில பொதுசெயலாளர் புகார்

ADDED : ஜூன் 14, 2024 12:18 AM


Google News
Latest Tamil News
கோவை : பேஸ்புக்கில் கொலை மிரட்டல் விடுப்பதாக பா.ஜ., மாநில பொதுசெயலாளர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

கிருஷ்ணகிரியில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை புகைப்படத்தை ஆட்டுக்கு அணிவித்து, அதன் தலையை வெட்டிய விவகாரத்திற்கு, தனது பேஸ்புக் பக்கத்தில் பா.ஜ., மாநில பொது செயலாளர் முருகானந்தம் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இதற்கு எதிராக பேஸ்புக்கில் தேவராஜ் என்பவர் தகாத வார்த்தையில் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து முருகானந்தம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் புகார் அளித்தார். புகார் மனுவில் அவர் பேஸ்புக்கில் கொலைமிரட்டல் விடுத்த தேவராஜ் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

புகார் மனு அளித்த பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்டு மக்கள் சேவைக்காக பாடுபட்டு கொண்டு இருக்கின்றோம். தேர்தல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மாநில தலைவர் அண்ணாமலையை கொச்சை படுத்தி கொலை மிரட்டல் விடுப்பது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. கிருஷ்ணகிரியில் நடுரோட்டில் ஆட்டிற்கு அண்ணாமலை படத்தை போட்டு வெட்டினர்.

இது மாநில தலைவருக்கு எச்சரிக்கை விடும் விதமாக செய்துள்ளனர். தி.மு.க., அரசு இதை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கின்றது. யாரையும் கைது செய்யவில்லை. என்னுடைய பேஸ்புக் கணக்கில் எங்களை கண்டம், துண்டமாக வெட்டுவோம் என பதிவிட்டு இருக்கின்றனர். அந்த நபர் யார், அரசியல் காரணங்கள் இருக்கின்றதா, எனபது குறித்து போலீசார் விசாரிக்க வேண்டும்.

இதுகுறித்து வழக்கு பதிய புகார் கொடுத்து இருக்கின்றோம். கிருஷ்ணகிரியில் ஆட்டை வெட்டியது நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது. தமிழிசை சவுந்தரராஜன்,- மத்திய அமைச்சர் அமித்ஷா இடையிலான பேச்சு கண்டிப்பு என சொல்ல முடியாது. அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசி இருப்பார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us