Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தொடர் கனமழை; 3 வீடுகள் சேதம்

தொடர் கனமழை; 3 வீடுகள் சேதம்

தொடர் கனமழை; 3 வீடுகள் சேதம்

தொடர் கனமழை; 3 வீடுகள் சேதம்

ADDED : ஜூலை 20, 2024 12:14 AM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகேகனமழை பெய்ததில், இரண்டு வீடுகள் விழுந்து சேதமடைந்தது.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று காலை முதல் சிறு இடைவெளி விட்டு, கனமழை பெய்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட, ராமபட்டணம் கிராமத்தில், கவுசல்யா என்பவரது வீட்டின் மண் சுவர் வீடு இடிந்து விழுந்தது; அதில் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.இது போன்று, ஜமீன் முத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட, அரண்மனை வீதியில்,சின்னச்சாமி என்பவரது வீட்டு சுவர் இடிந்து, பஞ்சலிங்கம் என்பவரது வீட்டின் மீது விழுந்தது. அதில், இரு வீடுகளும் சேதமடைந்து, பஞ்சலிங்கம் மகன் கனகசபாபதி,23 என்பவருக்கு காயம் ஏற்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us