/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சவுக்கு சங்கர் ஜாமின் மீண்டும் ஒத்திவைப்பு சவுக்கு சங்கர் ஜாமின் மீண்டும் ஒத்திவைப்பு
சவுக்கு சங்கர் ஜாமின் மீண்டும் ஒத்திவைப்பு
சவுக்கு சங்கர் ஜாமின் மீண்டும் ஒத்திவைப்பு
சவுக்கு சங்கர் ஜாமின் மீண்டும் ஒத்திவைப்பு
ADDED : ஜூன் 11, 2024 08:26 PM
கோவை:சவுக்கு சங்கர் ஜாமின் மீதான உத்தரவு பிறப்பிக்க, மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
'சவுக்கு மீடியா' என்ற யு டியூப் சேனல் நடத்தி வரும், சென்னையை சேர்ந்த சங்கர், 'ரெட்பிக்ஸ்' யு யூடிப் சேனலுக்கு பேட்டி அளித்த போது, பெண் போலீஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக, கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஜாமினில் விடுவிக்க கோரி, கோவை, ஜே.எம்:4, கோர்ட்டில் சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனு மீது உத்தரவு பிறப்பிக்க, நேற்று வாய்தா போடப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஜாமின் மனு மீதான உத்தரவு, மீண்டும் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.