
திருப்பூர்:உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், வியாழன் தோறும், இ-நாம் திட்டத்தின் கீழ், கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.
நேற்று நடந்த ஏலத்திற்கு, பல்வேறு பகுதிகளிலிருந்து, 13 விவசாயிகள், 28 மூட்டையில், 1,400 கிலோ கொப்பரை மறைமுக ஏலத்திற்கு கொண்டு வந்தனர்.
இ-நாம் திட்டத்தின் கீழ், 6 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர். முதல் தர கொப்பரை, 81.21 முதல், 90.11 ரூபாய் வரையும், இரண்டாம் தரம், 68.19 முதல், 78.86 ரூபாய் வரையும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது.
ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:
விவசாயிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 94439 62834 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, கூறினார்.