Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வாழைத்தார் வரத்து சரிவு; விலை உயர்வால் மகிழ்ச்சி

வாழைத்தார் வரத்து சரிவு; விலை உயர்வால் மகிழ்ச்சி

வாழைத்தார் வரத்து சரிவு; விலை உயர்வால் மகிழ்ச்சி

வாழைத்தார் வரத்து சரிவு; விலை உயர்வால் மகிழ்ச்சி

ADDED : மார் 13, 2025 11:36 PM


Google News
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில், தனிப்பயிராகவும், தென்னையில் ஊடுபயிராகவும், விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். அறுவடை செய்யப்படும் வாழைத்தாரை, தினசரி மார்க்கெட்டில் விற்பனை செய்கின்றனர்.

மார்க்கெட்டில், செவ்வாழை கிலோ - 80, நேந்திரன் --- 40, கதளி --- 50, ரஸ்தாலி --- 45, சாம்பிராணி வகை வாழைத்தார் --- 40 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை விட, நேந்திரன், பூவன், கதளி மற்றும் ரஸ்தாலி வாழைத்தார்கள் கிலோவுக்கு ஐந்து ரூபாய் விலை அதிகரித்துள்ளது. சாம்பிராணி வகை வாழைத்தார் மட்டும் ஐந்து ரூபாய் விலை குறைந்துள்ளது.

வியாபாரிகள் கூறியதாவது, 'மார்க்கெட்டிற்கு வாழைத்தார் வரத்து சரிந்துள்ளது. இதனால், விலை சற்று அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us