/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஜாக் சார்பில் பக்ரீத் சிறப்பு தொழுகை ஜாக் சார்பில் பக்ரீத் சிறப்பு தொழுகை
ஜாக் சார்பில் பக்ரீத் சிறப்பு தொழுகை
ஜாக் சார்பில் பக்ரீத் சிறப்பு தொழுகை
ஜாக் சார்பில் பக்ரீத் சிறப்பு தொழுகை
ADDED : ஜூன் 17, 2024 12:53 AM

போத்தனுார்;பக்ரீத் (ஈகை திருநாள்) யொட்டி நேற்று காலை ஆத்துபாலம் அடுத்த சுண்ணாம்பு காளவாய் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டப வளாகத்தில் ஜாக் அமைப்பு சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது.
அமைப்பின் கோவை மாநகர் மாவட்ட தலைவர் ரஹீம் தலைமை வகித்தார். ரபீக் பர்தோஷி, ஈகை திருநாளின் முக்கிய கடமை குறித்து சொற்பொழிவாற்றினார்.
இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.