/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி சர்வதேச யோகா தினம் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி சர்வதேச யோகா தினம்
ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி சர்வதேச யோகா தினம்
ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி சர்வதேச யோகா தினம்
ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி சர்வதேச யோகா தினம்
ADDED : ஜூன் 24, 2024 01:13 AM

கோவை;கோவைபுதுார் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் சர்வதேச யோகா தின விழா நடந்தது. உடலை வில்லாக வளைத்து ஐநுாறுக்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசனங்களை செய்து பார்வையாளர்களை அசத்தினர்.
பள்ளியின் தாளாளர் தேவேந்திரன் தலைமை வகித்து நிகழ்ச்சிகளை துவக்கிவைத்தார். இதில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை மாணவர்கள் இணைந்து யோகாசனம் செய்தனர். பத்மாசனம், யோகமுத்ரா, வக்ராசனம், சூர்யநமஸ்காரம், சித்தாசனம், பர்வதாசனம், வீராசனம், உள்ளிட்ட பல்வேறு விதமான யோகாசனங்களை செய்தனர்.
நிகழ்ச்சியில் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி நிர்வாகி கவுரி உதயேந்திரன்,செயலாளர் ரவிக்குமார், வித்யாஸ்ரமம் மழலையர் பள்ளியின் நிர்வாக இயக்குனர் சவுந்தர்யா,பள்ளி முதல்வர் சரண்யா, யோகா பயிற்சியாளர் சதிஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.