Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காரீப் பருவத்தில் பயிர்காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வாய்ப்பு

காரீப் பருவத்தில் பயிர்காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வாய்ப்பு

காரீப் பருவத்தில் பயிர்காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வாய்ப்பு

காரீப் பருவத்தில் பயிர்காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வாய்ப்பு

ADDED : ஜூலை 19, 2024 01:39 AM


Google News
பொள்ளாச்சி;கோவை மாவட்டத்தில், காரீப் பருவத்தில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்த அரசாணை பெற்று, தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கோவை கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:

கோவை மாவட்டத்திலுள்ள விவசாயிகள், காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய, சொந்த நிலம், குத்தகை நிலம் உள்ளவர்கள் சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை ஆகியவற்றை கொண்டு, இ--சேவை மையம் வாயிலாக பயிர்காப்பீடு செய்யலாம்.

இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும், பயிர் மகசூல் இழப்பீட்டிலிருந்து விவசாயிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். இது குறித்த சந்தேகங்களுக்கு, அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம்.

கட்டணம் எவ்வளவு?


பயிர்காப்பீடு ஏக்கர் ஒன்றுக்கு நெற்பயிருக்கு, 764 ரூபாயும், உளுந்து மற்றும் பச்சை பயருக்கு, 308 ரூபாய். வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கணும்.மக்காச்சோளத்துக்கு--744,சோளம் -245,கொள்ளு-308,வாழை பயிருக்கு ஏக்கருக்கு 2,939 ரூபாய், மரவள்ளி-1,720,மஞ்சள்-722 ரூபாய். செப்., 16க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

கத்தரிக்காய்க்கு 1,170 ரூபாய், வெங்காயத்துக்கு, 1,782 ரூபாய், தக்காளிக்கு 1,495 ரூபாய். ஆக.,31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு, அறிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us