Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ எள்ளில் அதிக மகசூல் பெற வேளாண்துறை அறிவுரை

எள்ளில் அதிக மகசூல் பெற வேளாண்துறை அறிவுரை

எள்ளில் அதிக மகசூல் பெற வேளாண்துறை அறிவுரை

எள்ளில் அதிக மகசூல் பெற வேளாண்துறை அறிவுரை

ADDED : ஜூன் 20, 2024 11:15 PM


Google News
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் பிளிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் எள் பயிரிடப்படுகிறது. எள் சாகுபடி காலம், 85 நாட்களாகும். குறைந்த நீரில் சாகுபடி செய்து, அதிக லாபம் பெறலாம்.

ஏக்கருக்கு இரண்டு கிலோ விதை அளவு போதுமானது. எள் அனைத்து வகையான மண்ணிலும் நன்றாக வளரும். சித்திரை மாதத்தில் இரண்டு முறை கோடை உழவு செய்து, மண்ணை நன்கு கலைத்து விட வேண்டும்.

விதை வாயிலாக பரவும் நோய்களை கட்டுப்படுத்த உயிர் பூஞ்சான கொல்லி மருந்தை ஒரு கிலோ விதைக்கு நான்கு கிராம் என்ற விகிதத்தில் விதையுடன் கலந்து, விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதைகள் மிகவும் லேசாக இருப்பதால், மணலுடன் கலந்து விதைக்க வேண்டும்.

சலித்து சுத்தமான மணலை விதையின் அளவுக்கு சம அளவு கலந்து, சீராக நிலத்தில் தூவ வேண்டும். விதைத்த, 30 வது நாள் 30 செ.மீ., இடைவெளி வைத்து மீண்டும் ஒரு முறை செடியை கலைத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதால் அதிக காய்கள் பிடிக்கும்.

அதிகபட்சமாக ஒரு செடியில் நூறு காய்கள் வரை வர வாய்ப்பு உள்ளது. விதைத்து ஒரு முறையும், வாரம் ஒரு முறையும், பூக்கும் தருணம் ஒரு முறையும், காய் பருவத்தில் ஒரு முறையும் நீர் பாசனம் செய்ய வேண்டும் என, வேளாண் துறையினர் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us