Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வெள்ளைப்பட்டை வேகத்தடையால் பாதிப்பு! எண்ணிக்கை, தடிமனை குறைக்க எதிர்பார்ப்பு

வெள்ளைப்பட்டை வேகத்தடையால் பாதிப்பு! எண்ணிக்கை, தடிமனை குறைக்க எதிர்பார்ப்பு

வெள்ளைப்பட்டை வேகத்தடையால் பாதிப்பு! எண்ணிக்கை, தடிமனை குறைக்க எதிர்பார்ப்பு

வெள்ளைப்பட்டை வேகத்தடையால் பாதிப்பு! எண்ணிக்கை, தடிமனை குறைக்க எதிர்பார்ப்பு

ADDED : ஜூன் 08, 2024 12:24 AM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகரின் சுற்றுப்பகுதியில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான வெள்ளைப்பட்டை வேகத்தடைகள், வாகனங்களில் பழுது ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

பொள்ளாச்சி நகரில், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தி விபத்துகளை தவிர்க்க, சாலைகளில் ஆங்காங்கே வேகத்தடைகள் அமைக்கப்படுகின்றன. குறிப்பாக, மருத்துவமனைகள், பள்ளிகள், கோவில்கள், ரயில்வே கிராசிங் என, மக்கள் அதிகம் வந்து செல்லும் நகர எல்லைக்கு உட்பட்ட சாலைகளில் மட்டுமே வேகத்தடை அமைக்கப்பட்டது.

ஆனால், தற்போது, பாலக்காடு, மீன்கரை, திருப்பூர், உடுமலை, கோவை என, முக்கிய வழித்தடங்களில், வெள்ளைப்பட்டை வேகத்தடைகள் அதிகளவில் அமைக்கப்பட்டுள்ளன.

துவக்கத்தில், இவ்வழித்தடங்களில், வெள்ளைப்பட்டை வேகத்தடை அமைக்கப்பட்ட இடங்களில், வாகனங்கள் வேகத்தை குறைத்தே இயக்கப்பட்டன. ஆனால், அவ்வழித்தடத்தை கடந்து செல்வதற்கான நேரம் அதிகரித்ததால், தற்போது, வெள்ளைப்பட்டை வேகத்தடையைப் எந்தவொரு வாகன ஓட்டுநர்களும் பொருட்படுதில்லை.

வழக்கமான வேகத்தில் கடந்து செல்கின்றனர். இதனால், வாகனங்களில் பழுது அதிகரிக்கிறது. வாகனங்களில் பயணிப்போர், உடல் ரீதியாக பாதிக்கின்றனர்.

தன்னார்வலர்கள் கூறியதாவது:

பொள்ளாச்சி சுற்றுப்பகுதி வழித்தடங்களில் வெள்ளைப்பட்டை வேகத்தடை (ரம்புள் ஸ்பீட் பிரேக்கர்) குறுகிய துாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வாகன ஓட்டுநர்கள் வாகனத்தின் வேகத்தை குறைக்க முற்படுவதும் கிடையாது.

இதன் காரணமாகவும், வாகனங்களில் பழுது அதிகரிப்பதுடன், விபத்தும் ஏற்படுகிறது. கணிசமான எண்ணிக்கையில், தேவையான இடங்களில் மட்டும் இத்தகைய வேகத்தடை அமைக்க வேண்டும்.

வெள்ளை பட்டைகளின் தடிமனையாவது குறைக்க வேண்டும். அப்பகுதியை கடக்கும் போது ஏற்படும் அதிர்வுகளால், கர்ப்பணிகள், முதியோர்கள் உடல்ரீதியான பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இருதயம், சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள், பஸ், கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்களில்செல்லும் போது, பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.

அதனால், மக்கள் நலனை கருத்தில் கொண்டு, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், இந்த பிரச்னையில் கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us