Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆடிப்பூர திருத்தேர் விழா கொடியேற்றம்

ஆடிப்பூர திருத்தேர் விழா கொடியேற்றம்

ஆடிப்பூர திருத்தேர் விழா கொடியேற்றம்

ஆடிப்பூர திருத்தேர் விழா கொடியேற்றம்

ADDED : ஆக 01, 2024 01:06 AM


Google News
Latest Tamil News
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமநாயக்கன்பாளையத்தில் ஆண்டாள் திருநாச்சியார் சமேத ரங்க மன்னார் திருக்கோயிலில் ஆடிப்பூர திருத்தேர் உலா திருக்கல்யாண கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.

விழாவையொட்டி, தீபாராதனை, கொடியேற்றம், தீர்த்த பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இம்மாதம், 7ம் தேதி வரை தினசரி காலை, 10:00 மணி முதல், 12:00 மணி வரை திவ்ய பிரபந்த சேவா காலம், சிறப்பு அலங்காரம், தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது.

7ம் தேதி காலை, 6:00 மணிக்கு திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை பாராயணம், 10:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவம், மதியம்,1:00 மணிக்கு அன்னதானம், மதியம், 2:00 மணிக்கு திருத்தேர் உலா, 4:00 மணிக்கு ஆண்டாள் ரங்க மன்னார் திருமஞ்சனம், மாலை, 5:30 மணிக்கு ஊஞ்சல் சேவை ஆகியன நடக்கின்றன.

8ம் தேதி காலை, 10:00 மணிக்கு சுதர்சன திருமஞ்சனம், 11:00 மணிக்கு கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, ஆண்டாள் நவநீத வெங்கட கிருஷ்ண தரும பரிபாலன சபா செய்து வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us