/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.2.06 கோடிக்கு காய்கறி விற்பனை உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.2.06 கோடிக்கு காய்கறி விற்பனை
உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.2.06 கோடிக்கு காய்கறி விற்பனை
உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.2.06 கோடிக்கு காய்கறி விற்பனை
உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.2.06 கோடிக்கு காய்கறி விற்பனை
ADDED : ஜூலை 03, 2024 02:49 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி உழவர் சந்தையில் கடந்த மாதம், 2.06 கோடி ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனையாகியுள்ளன.
பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் அருகே உழவர் சந்தை செயல்படுகிறது. விவசாயிகள் காய்கறிகளை நேரிடையாக சந்தைப்படுத்தும் வகையில், உழவர் சந்தை செயல்படுகிறது. இங்கு மொத்தம், 80 கடைகள் உள்ளன.
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை, ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதியில் அடையாள அட்டை பெற்றுள்ள, 300க்கும் மேற்பட்ட விவசாயிகள், காய்கறி விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
காய்கறிகள் தரமாகவும், விலை மலிவாகவும்; விவசாயிகள் நேரிடையாக விற்பனை செய்வதால், நுகர்வோர்கள் காய்கறி வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த மாதம், இரண்டு கோடியே, 6 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.
உழவர் சந்தை அதிகாரிகள் கூறுகையில்,'உழவர் சந்தைக்கு கடந்த மாதம் நாளொன்றுக்கு, 6 லட்சத்து, 66 ஆயிரத்து, 683 ரூபாய் மதிப்புள்ள, 14,418 கிலோ காய்கறிகள் வந்தன. ஒரு நாளுக்கு, 62 விவசாயிகளும், 2,833 நுகர்வோர்களும் வந்தனர்.
கடந்த மாதம் மொத்தம், 447 மெட்ரிக் டன் காய்கறி வரத்து காணப்பட்டது. இவைகளின் மொத்த விற்பனை மதிப்பு, இரண்டு கோடியே, 6 லட்சத்து, 71 ஆயிரத்து, 195 ரூபாயாகும். மொத்தம், 1,941 விவசாயிகள் வந்ததுடன், 89 ஆயிரத்து, 393 நுகர்வோர்கள் வந்து இருந்தனர்,'' என்றனர்.