ADDED : ஜூலை 25, 2024 12:07 AM
போத்தனூர் : போத்தனூர், செட்டிபாளையம் சாலையிலுள்ள அன்பு நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன், 43.
இவர் தங்க நகைகளை பீரோவிற்குள் வைப்பது வழக்கம். கடந்த, 12ம் தேதி இவர் பீரோவை திறந்தார். அவரது மனைவி உடனிருந்தார். அப்போது பீரோவிலிருந்த இரண்டு செயின், மோதிரம், கம்மல், பிரேஸ்லெட், வளையல்கள் என மொத்தம், 11.5 சவரன் நகைகள் காணாமல் போயிருந்தன. இதன் மதிப்பு, நான்கு லட்சம் ரூபாயாகும். இவரது புகாரில், சுந்தராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.