/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஏலச்சீட்டு நடத்தி மோசடி நீலாங்கரையில் பெண் கைது ஏலச்சீட்டு நடத்தி மோசடி நீலாங்கரையில் பெண் கைது
ஏலச்சீட்டு நடத்தி மோசடி நீலாங்கரையில் பெண் கைது
ஏலச்சீட்டு நடத்தி மோசடி நீலாங்கரையில் பெண் கைது
ஏலச்சீட்டு நடத்தி மோசடி நீலாங்கரையில் பெண் கைது
ADDED : செப் 21, 2025 01:48 AM

நீலாங்கரை :ஏலச்சீட்டு நடத்தி பண மோசடி செய்த பெண்ணை, போலீசார் கைது செய்தனர். தலைமறைவான அவரின் கணவரை தேடி வருகின்றனர்.
மயிலாப்பூரை சேர்ந்தவர் திவ்யா, 43. இவர், கணவரை பிரிந்து, இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர், 2019ம் ஆண்டு, நீலாங்கரையில் குடியிருந்தபோது, அபினாஷ், 35, செல்வி, 32, ஆகியோரிடம் அறிமுகம் ஏற்பட்டது.
தம்பதியான அவர்கள் நடத்தும், 4 மற்றும் 5 லட்சம் ரூபாய் ஏலச்சீட்டில், திவ்யா சேர்ந்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு, அவசரக் கடனாக, திவ்யாவிடம் இருந்து, 3.50 லட்சம் ரூபாயும் வாங்கியுள்ளனர்.
அதன்பின், கடனாக வாங்கிய பணம் மற்றும் ஏலச்சீட்டில் முதிர்வடைந்த பணத்தை, அவர்கள் திருப்பி கொடுக்கவில்லை. அதனால், நீலாங்கரை போலீசில் திவ்யா புகார் அளித்தார்.
விசாரணையில், ஏலச்சீட்டு நடத்தி, மேலும் பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டு தலைமறைவானது தெரிந்தது. இந்நிலையில், கேளம்பாக்கத்தில் இருந்த செல்வியை, நேற்று போலீசார் கைது செய்தனர். தலைமறைவான அவரின் கணவர் அபினாஷை தேடி வருகின்றனர்.