Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வல்லக்கோட்டை முருகன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை

வல்லக்கோட்டை முருகன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை

வல்லக்கோட்டை முருகன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை

வல்லக்கோட்டை முருகன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை

ADDED : மே 21, 2025 12:48 AM


Google News
Latest Tamil News
ஸ்ரீபெரும்புதுார் :காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே, பழமையான வல்லக்கோட்டை முருகன் கோவில் உள்ளது. இக்கோவில் உண்டியல் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எண்ணப்படுவது வழக்கம்.

அதன்படி, பிப்ரவரியில் 10 உண்டியல்கள் திறக்கப்பட்டதில், 29 லட்சத்து, 36,841 ரூபாய், 70 கிராம் தங்கம், 1,900 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், திருபுரசுந்தரி அம்மன் சன்னிதி, சண்முகர் சன்னிதியில் வைக்கப்பட்டிருந்த இரண்டு உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து, ஒரகடம் போலீசார் வழக்கு பதிந்து, கோவில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

வரும் ஜூலையில் கும்பாபிஷேகம் நடக்கவுள்ள நிலையில், மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து உண்டிலை உடைந்து கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us