Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சீரமைக்கப்படாத பள்ளங்கள் ஓ.எம்.ஆரில் விபத்து அபாயம்

 சீரமைக்கப்படாத பள்ளங்கள் ஓ.எம்.ஆரில் விபத்து அபாயம்

 சீரமைக்கப்படாத பள்ளங்கள் ஓ.எம்.ஆரில் விபத்து அபாயம்

 சீரமைக்கப்படாத பள்ளங்கள் ஓ.எம்.ஆரில் விபத்து அபாயம்

ADDED : டிச 01, 2025 01:20 AM


Google News
Latest Tamil News
செம்மஞ்சேரி: ஓ.எம்.ஆர்., குமரன் நகர் சந்திப்பில், சாலை பள்ளங்கள் ஒரு மாதமாக சீரமைக்காததால், நெரிசல் அதிகரித்து, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.

ஓ.எம்.ஆரில் மெட்ரோ ரயில் பணி நடக்கிறது. ஓ.எம்.ஆரில் இருந்து நுாக்கம்பாளையம் இணைப்பு சாலை நோக்கி திரும்பும் குமரன் நகர் சந்திப்பில், போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். மெட்ரோ பணியால், அங்கு இருந்த சிக்னல் அகற்றப்பட்டது.

இதனால், சோழிங்கநல்லுாரில் இருந்து நுாக்கம்பாளையம் இணைப்பு சாலை வழியாக, சுனாமி நகர் பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம் நோக்கி செல்லும் வாகனங்கள், சிக்னல் இருந்த இடத்தில் இருந்து, 200 மீட்டர் துாரம் சென்று, யு - டர்ன் செய்து திரும்ப வேண்டும்.

இதனால், குமரன் நகர் சந்திப்பில், நெரிசலுடன் வாகனங்கள் மெதுவாக செல்லும். இந்த சந்திப்பில், சாலை மிகவும் மோசமாக உள்ளது. ஆங்காங்கே பள்ளம் விழுந்துள்ளதால், வழக்கத்தை விட வாகனங்கள் மெதுவாக செல்கின்றன.

அதனால், நெரிசல் அதிகரித்து, சாலையை கடக்கும் பாதசாரிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். வேகமாக வரும் வாகனங்கள், பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகின்றன.

ஒரு மாதமாக பள்ளங்களை சீரமைக்காததால், பெரிய பள்ளமாக மாறி வருகிறது. ஓ.எம்.ஆர்., முக்கிய வழித்தடமாக உள்ளதால், சாலை பள்ளங்களை சீரமைக்க, மெட்ரோ ரயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us