/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரயிலில் அடிபட்டு இரு வாலிபர்கள் பரிதாப பலி ரயிலில் அடிபட்டு இரு வாலிபர்கள் பரிதாப பலி
ரயிலில் அடிபட்டு இரு வாலிபர்கள் பரிதாப பலி
ரயிலில் அடிபட்டு இரு வாலிபர்கள் பரிதாப பலி
ரயிலில் அடிபட்டு இரு வாலிபர்கள் பரிதாப பலி
ADDED : செப் 19, 2025 12:38 AM
பெரம்பூர்: ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராம்ஜித் யாதவ், 32, மற்றும் பிஜுலி யாதவ், 33, ஆகியோர், சென்னை பெரவள்ளூரில் உள்ள பெரம்பூர் சீனிவாசா உணவகத்தில், வேலை செய்து வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, பெரம்பூர் லோகோ ரயில் நிலையத்திற்கும், பெரம்பூர் கேரேஜ் ரயில் நிலையத்திற்கும் இடையே, தண்டவாள பாதையை கவனக் குறைவாக கடந்தனர்.
அப்போது சென்ட்ரல் - அரக்கோணம் வழியே சென்ற மின்சார ரயிலில் இருவரும் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரு உடல்களையும் மீட்ட பெரம்பூர் ரயில்வே போலீசார், பிரேத பரிசோதனை முடித்து உறவினர்களிடம் நேற்று ஒப்படைத்தனர்.