/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சினிமா உதவி இயக்குநர் கடத்தல் வழக்கில் மேலும் 2 பேர் கைது சினிமா உதவி இயக்குநர் கடத்தல் வழக்கில் மேலும் 2 பேர் கைது
சினிமா உதவி இயக்குநர் கடத்தல் வழக்கில் மேலும் 2 பேர் கைது
சினிமா உதவி இயக்குநர் கடத்தல் வழக்கில் மேலும் 2 பேர் கைது
சினிமா உதவி இயக்குநர் கடத்தல் வழக்கில் மேலும் 2 பேர் கைது
ADDED : ஜூன் 02, 2025 03:28 AM

சென்னை:அரும்பாக்கத்தில் வசிப்பவர் திரைப்பட இயக்குனர் சுசீந்திரன். இவர், வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.
இவரது உதவி இயக்குனர், மதுரையைச் சேர்ந்த ராஜகுமாரன் என்பவரை, மே 25ம் தேதி, மர்ம நபர்கள் காரில் கடத்தினர்.
இதுகுறித்து சுசீந்திரன் புகாரையடுத்து, அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்த நிலையில், மறுநாள் இரவு ராஜகுமாரன், அரும்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரித்தனர்.
அப்போது, மதுரையில் கல்லுாரி ஒன்றில் படிக்கும்போது தான் காதலித்த பெண், சென்னை பெசன்ட் நகரில் டேனியல் ராஜ் என்பவர் நடத்தி வரும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது, டேனியல் ராஜ், அந்த பெண்ணை காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அவரிடம், என்னை காதலித்து வருவதாக, அந்த பெண் கூறியுள்ளார்.
இதையடுத்து அவர், என்னை காரில் கடத்தி, அடித்து சித்ரவதை செய்து, அந்த பெண்ணை மறந்துவிடும் மிரட்டியதாக, ராஜகுமாரன் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் போலீசார் விசாரித்து, ராஜகுமாரனை கடத்திய வழக்கில், சைதாப்பேட்டையைச் சேர்ந்த திவாகர், 21, உட்பட ஐந்து பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
தலைமறைவாக இருந்த டேனியல்ராஜ், 44, மற்றும் இவரது கூட்டாளி அந்தோணி, 39, ஆகியோரை கைது செய்தனர்.