/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறைக்கு அவகாசம் அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறைக்கு அவகாசம்
அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறைக்கு அவகாசம்
அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறைக்கு அவகாசம்
அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறைக்கு அவகாசம்
ADDED : மே 21, 2025 12:37 AM
சென்னை:அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறைக்கு, அடுத்த ஆண்டு ஜூன், 30 வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அங்கீகாரமில்லாத மனைகள், மனைப்பிரிவுகள் விற்பனைக்கு, 2017ல் தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, 2016 அக்., 20க்கு முன் பத்திரப்பதிவு செய்யப்பட்ட மனைகளை மட்டும் வரன்முறைபடுத்த அரசு முடிவு செய்தது.
இதற்கான வரன்முறை திட்டம், 2017ல் அறிவிக்கப்பட்டது. இதில், மக்கள் விண்ணப்பிப்பதற்கான அவகாசம், 2019 நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், அங்கீகாரமில்லாத மனைகளை வரன்முறைப்படுத்த, கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.
அதைத் தொடர்ந்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் காகர்லா உஷா பிறப்பித்துள்ள உத்தரவு:
தமிழகத்தில், 2016 அக்டோபர், 20க்கு முன் பத்திரப்பதிவு செய்யப்பட்ட, அங்கீகாரமில்லாத மனைகளை வரன்முறைப்படுத்த, கூடுதல் அவகாசம் அளிக்கப்படுகிறது.
இதன்படி, மனைகள் மற்றும் மனைப்பிரிவு உரிமையாளர்கள், 2026 ஜூன், 30 வரை விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள், 'ஆன்லைன்' வாயிலாக, இதற்கான விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். இதற்கு, 2017ல் பிறப்பிக்கப்பட்ட விதிமுறைகள் பொருந்தும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.