Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ போலி பெருங்காயம் மூவரிடம் விசாரணை

போலி பெருங்காயம் மூவரிடம் விசாரணை

போலி பெருங்காயம் மூவரிடம் விசாரணை

போலி பெருங்காயம் மூவரிடம் விசாரணை

ADDED : ஜூன் 15, 2025 12:35 AM


Google News
சென்னை, போலி பெருங்காயம் தயாரித்து விற்பனை செய்தது தொடர்பாக, மூன்று பேரை பிடித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பிரபல நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி, மர்ம நபர்கள் போலி பெருங்காயம் தயாரித்து விற்பதாக, சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு புகார்கள் சென்றன.

அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, சென்னை, கொடுங்கையூரில் ஆறு இடங்களில் நேற்று சோதனை செய்தனர். அப்போது, வாடகைக்கு கிடங்கு எடுத்து, பிரபல நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி போலி பெருங்காயம் தயாரித்து விற்று வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக, கொடுங்கையூரைச் சேர்ந்த மூன்று பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இவர்களிடம் இருந்து, 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போலி பெருங்காயமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us