ADDED : ஜன 12, 2024 01:03 AM
பெரம்பூர், யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல, மழைக்காலம் விடைபெற்று வெயில் காலம் துவங்கக்கூட இல்லாத நிலையில், சென்னையில் மின்வெட்டு ஆங்காங்கே துளிர் விட ஆரம்பித்துள்ளது.
பெரம்பூர் 71வது வார்டுக்குட்பட்ட மேட்டுப்பாளையத்தில் கடந்த சில நாட்களாக இரவு 7:30 மணி முதல் சில மணி நேரம் தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது. இதுகுறித்து, ‛பல முறை மின்வாரியத்திடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை' என பகுதிமக்கள் ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர்.