/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஓலா, ஊபரில் பதிவு செய்து பயணிக்க கிளாம்பாக்கத்தில் தனி இடம் ஒதுக்கீடு ஓலா, ஊபரில் பதிவு செய்து பயணிக்க கிளாம்பாக்கத்தில் தனி இடம் ஒதுக்கீடு
ஓலா, ஊபரில் பதிவு செய்து பயணிக்க கிளாம்பாக்கத்தில் தனி இடம் ஒதுக்கீடு
ஓலா, ஊபரில் பதிவு செய்து பயணிக்க கிளாம்பாக்கத்தில் தனி இடம் ஒதுக்கீடு
ஓலா, ஊபரில் பதிவு செய்து பயணிக்க கிளாம்பாக்கத்தில் தனி இடம் ஒதுக்கீடு
ADDED : மார் 18, 2025 12:17 AM
சென்னை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பயணியர், ஓலா, ஊபர் செயலி வாயிலாக, கார், ஆட்டோக்களில் முன்பதிவு செய்து பயணிக்க வசதியாகவும், அத்தகைய வாகனங்கள் வந்து செல்லவும் தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தினமும், 1,100 பஸ்கள் இயக்கப்படுகின்றன. தாம்பரத்தில் ஏற்படும் நெரிசலை குறைக்க, கடந்த 4ம் தேதி முதல், வெளியூர் அரசு பஸ்கள் தாம்பரம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தின் நுழைவு பகுதிகளில், பயணியர் அதிகம் இறங்கி, மாநகர பஸ்களில் மாறி செல்கின்றனர்.
இந்நிலையில், ஓலா, ஊபர் செயலி வாயிலாக ஆட்டோ, கார்களை முன்பதிவு செய்து, பயணியர் செல்ல வசதியாக, கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில், தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:
கிளாம்பாக்கத்தில் இருந்து பயணியர் சிரமம் இன்றி செல்ல, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், 860க்கும் மேற்பட்ட பஸ்கள் தினமும் இயக்கப்படுகின்றன.
இதுதவிர, சிலர் ஆட்டோ, கால்டாக்சிகளில் பயணிக்க விரும்புகின்றனர். இதனால், ஜி.எஸ்.டி., சாலையை ஆபத்தான நிலையில் கடந்து செல்கின்றனர். எனவே, ஓலா, ஊபர் செயலி வாயிலாக, பயணியர் முன்பதிவு செய்து பயணிக்க, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் நுழைவு பகுதியில், தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில், 20 கார்கள், ஆட்டோக்களை நிறுத்த முடியும். அதற்கு தேவையான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த வசதி, இரண்டு வாரங்களில் பயன்பாட்டிற்கு வரும். பயணியரிடம் நியாயமான கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
***