Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பழுதான கண்காணிப்பு கேமரா வில்லிவாக்கத்தில் சீரமைப்பு

பழுதான கண்காணிப்பு கேமரா வில்லிவாக்கத்தில் சீரமைப்பு

பழுதான கண்காணிப்பு கேமரா வில்லிவாக்கத்தில் சீரமைப்பு

பழுதான கண்காணிப்பு கேமரா வில்லிவாக்கத்தில் சீரமைப்பு

ADDED : ஜூன் 04, 2025 12:09 AM


Google News
Latest Tamil News
வில்லிவாக்கம், குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறியவும், விபத்து ஏற்படுத்திச் செல்லும் வாகனங்களை அடையாளம் காணும் வகையிலும், சென்னை முழுதும் கண்காணிப்பு 'கேமரா'க்கள் பொருத்தப்பட்டன.

அவை முறையாக பராமரிக்கப்படாமல், பல இடங்களில் பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் பழுது காரணமாக, குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுகிறது.

குறிப்பாக, வில்லிவாக்கம் சிட்கோ நகர், நான்காவது பிரதான சாலையின் நான்கு முனை சந்திப்பில் உள்ள கேமராக்கள், பல மாதங்களாக உடைந்து தொங்கியபடி இருந்தன.

அதேபோல், தெற்கு ஜெகன்நாத நகர் இரண்டாது பிரதான சாலையிலும், கேமரா இல்லாமல் கம்பங்கள் மட்டும் சாலையில் சாய்ந்து கேட்பாரற்று கிடந்தன.

இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, வில்லிவாக்கம் போலீசார் நடவடிக்கை எடுத்து, பழதடைந்த கேமராக்களை தற்காலிமாக சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us