/உள்ளூர் செய்திகள்/சென்னை/'பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்புகள் அவசியம்''பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்புகள் அவசியம்'
'பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்புகள் அவசியம்'
'பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்புகள் அவசியம்'
'பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்புகள் அவசியம்'

அற்புதமான நுால்
இதை எழுதியவர், ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக இருந்தவர். அவர், தேர்தல் கமிஷன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மக்கள் பணியாற்றியவர். எப்போதும் பரபரப்பாக இயங்கிய இவர், அறிவியலுக்குள் இருக்கும் ஆன்மிக கருத்துகளை ஆராய்ந்து, அற்புதமான நுாலாக தந்து உள்ளார். இந்த நுால் சைவ, வைணவ சமய நுாலாகவும், தமிழ் பண்பாட்டு வரலாற்று நுாலாகவும் உள்ளது. ஒரு நுால், படிப்பவரை நல்வழிப்படுத்த வேண்டும். நம் சங்க இலக்கியத்தில் தலைவி, தலைவனுடன் உடன்போக்கு சென்றதை அறிந்து, தலைவியின் தாய் தேடிப் போகிறாள். எதிர்ப்பட்ட இணையரிடம், 'உங்களைப்போல என் பெண்ணும், ஆண் மகனுடன் சென்றாளா?' என கேட்கிறாள். அதற்கு, ஆணை பற்றி அவனும், அந்த பெண்ணை பற்றி அவளும் சொல்வதாக காட்சி வரும். அதாவது, மற்ற பெண்ணை ஆணோ, ஆணை பெண்ணோ நோக்காத பண்பாட்டை நம் இலக்கியம் சொல்கிறது.

நிம்மதி தரும்
இப்படி நிறைய ஆன்மிக நிகழ்ச்சிகள், சமூகத்துக்கான பாடங்களாக உள்ளன. நிம்மதியற்ற வேளையில், சமயமும், ஆன்மிகமும், நிம்மதியை வழங்கும். முன்பெல்லாம், பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் இருந்தன. மாணவர்களுக்கு அவற்றின் வாயிலாக நீதிகள் சொல்லப்பட்டன. மீண்டும் அவை வந்தால்தான், மாணவர்கள் நல்லவர்களாக மாறுவர். இதுபோன்ற நுால்களை, மாணவர்கள் படிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பரிணாமம்
டார்வினுக்கு முன்பே, நம் தொல்காப்பியத்தில், ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான பரிணாமம் விளக்கப்பட்டுள்ளது. கலிலியோவுக்கு முன்பே, பூமி உருண்டை என்பதை திருமுருகாற்றுப்படை விளக்கியுள்ளது. கோள்களின் நிறத்தையும் தன்மையையும் நம் ஜோதிட சாஸ்திரங்கள் விளக்கியுள்ளன. சமய நுால்களை நாம் தத்துவ நுால்களாக சுருக்கி விட்டோம். அவற்றை அறிவியலோடு இணைக்கும் பணியை நுாலாசிரியர் செய்துள்ளார். இங்குள்ள கல்வியாளர்கள் இதைத் தொடர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.