/உள்ளூர் செய்திகள்/சென்னை/முகம் சிதைந்த நிலையில் அழுகிய ஆண் உடல் மீட்புமுகம் சிதைந்த நிலையில் அழுகிய ஆண் உடல் மீட்பு
முகம் சிதைந்த நிலையில் அழுகிய ஆண் உடல் மீட்பு
முகம் சிதைந்த நிலையில் அழுகிய ஆண் உடல் மீட்பு
முகம் சிதைந்த நிலையில் அழுகிய ஆண் உடல் மீட்பு
ADDED : ஜன 06, 2024 12:08 AM

செங்கல்பட்டு, செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில், பாழடைந்த திரையரங்கம் உள்ளது. தற்போது, இந்த திரையரங்கம் 'குடி'மகன்களின் கூடாரமாக உள்ளது.
இந்த பாழடைந்த திரையரங்க வளாகத்தில், அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக, செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், முகம் சிதைக்கப்பட்டு, அழுகிய நிலையில் கிடந்த, 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, போலீசார் நடத்திய விசாரணையில், இறந்த நபர் செங்கல்பட்டு அடுத்த பரனுார் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த தாமோதரன், 30, என்பது தெரியவந்தது.
இவர், மது அருந்தும் போது மர்ம நபர்களால் தாக்கப்பட்டு இறந்தாரா என்பது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.