Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/தேசிய அட்டையில் இனி ரூ.10 முதல் ரீசார்ஜ்

தேசிய அட்டையில் இனி ரூ.10 முதல் ரீசார்ஜ்

தேசிய அட்டையில் இனி ரூ.10 முதல் ரீசார்ஜ்

தேசிய அட்டையில் இனி ரூ.10 முதல் ரீசார்ஜ்

ADDED : ஜன 12, 2024 11:58 PM


Google News
சென்னை, சென்னையில் உள்ள 41 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் காகித டிக்கெட், பயண அட்டை, க்யூ.ஆர்., தொழில்நுட்ப வசதியாக டிக்கெட் பெறும் வசதி இருக்கிறது.

பயண அட்டையில் 10 ரூபாய் முதல் ரீசார்ஜ் செய்து கொள்ளும் வசதி இருக்கிறது. ஆனால், தேசிய பொது இயக்க அட்டையில், ஆரம்பமே 100 ரூபாய் இருந்து தான் ரீசார்ஜ் செய்ய முடியும். பயணியரின் கோரிக்கையை ஏற்று, தற்போது இந்த அட்டையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், 'தேசிய பொது இயக்க அட்டை வாயிலாக, மெட்ரோ ரயில்களில் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

'குறைந்தபட்சம் 100 ரூபாய் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பதால், பயணியர் தயக்கம் காட்டினர். இதையடுத்து 10 ரூபாயிலும் ரீசார்ஜ் செய்யும் வசதி கொண்டு வந்துள்ளோம்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us