Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மக்கள் இழந்த ரூ.10.25 கோடி மீட்டு ஒப்படைத்த போலீசார்

மக்கள் இழந்த ரூ.10.25 கோடி மீட்டு ஒப்படைத்த போலீசார்

மக்கள் இழந்த ரூ.10.25 கோடி மீட்டு ஒப்படைத்த போலீசார்

மக்கள் இழந்த ரூ.10.25 கோடி மீட்டு ஒப்படைத்த போலீசார்

ADDED : மே 31, 2025 02:39 AM


Google News
சென்னை:நடப்பாண்டில், சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் பல்வேறு வகையில் பொதுமக்கள் இழந்த, 10.25 கோடி ரூபாய் மீட்கப்பட்டு, அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் சைபர் குற்றப்பிரிவு வாயிலாக, பல்வேறு வகையில் பொதுமக்கள் இழந்த பணத்தை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது. இது தொடர்பாக பொதுமக்கள், 1930 என்ற எண்ணிலும், சைபர் கிரைம் காவல் நிலையங்களில் நேரடியாகவும் புகார் தரலாம்.

'சைபர் கிரைம்' குற்றங்கள் தொடர்பாக, மே மாதம் மட்டும், 144 புகார்கள் பெறப்பட்டு, 2.31 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் ஐந்து மாதங்களில், 1,284 புகார்கள் பெற்றப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, சைபர் கிரைம் கும்பலிடம் இருந்து, 10.25 கோடி ரூபாய் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.

இணையவழி பண பரிமாற்றம் செய்யும்போது, பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என, சென்னை காவல் துறை அறிவுறுத்தி உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us