Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/பெண் குளிப்பதை படம்பிடித்த பெரம்பலுார் இன்ஜினியர் கைது

பெண் குளிப்பதை படம்பிடித்த பெரம்பலுார் இன்ஜினியர் கைது

பெண் குளிப்பதை படம்பிடித்த பெரம்பலுார் இன்ஜினியர் கைது

பெண் குளிப்பதை படம்பிடித்த பெரம்பலுார் இன்ஜினியர் கைது

ADDED : மார் 22, 2025 12:17 AM


Google News
மறைமலை நகர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், மறைமலை நகரில் தனியார் பெண்கள் விடுதியில் தங்கி, அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிகிறார்.

கடந்த 19ம் தேதி மதியம், விடுதியின் இரண்டாவது தளத்தில் உள்ள குளியல் அறையில் குளித்துள்ளார்.

அப்போது, மர்ம நபர் ஒருவர், ஜன்னல் வழியாக இளம்பெண்ணை, மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். இதைப் பார்த்து இளம்பெண் கூச்சலிடவே, அந்த மர்ம நபர் தப்பிச்சென்றார்.

இது குறித்து அப்பெண், மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார், இச்செயலில் ஈடுபட்ட பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்த அருள்தாஸ், 24, என்பவரை, நேற்று முன்தினம் மாலை கைது செய்தனர்.

இன்ஜினியரான அருள்தாஸ், மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தது தெரிந்தது. விசாரணைக்குப் பின் அருள்தாஸ், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us