ADDED : பிப் 12, 2024 01:57 AM
கும்மிடிப்பூண்டி:ஆந்திராவை சேர்ந்தவர் வல்லியம்பேடு காந்தி, 62. இவர், நேற்று முன்தினம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ஜீப், அவர் மீது மோதியது. படுகாயமடைந்த அவர், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
ஆரம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.